இளமை

Poems

இளமை

சிலுசிலுசிலுசிலுசிலுசிலு வென்றே தென்றல் வீசிவரும்! குளுகுளுகுளுகுளுகுளுகுளு வென்றே நிலவும் ஒளிசிந்தும்! கலகலகலகலகலகல வென்றே கொடிகள் அசைந்தாடும்! கமகமகமகமகமகம வென்றே மலர்கள் மணம்வீசும்! கடகடகடகடகடகட வென்றே கார்முகில் உருண்டோடும்! சடசடசடசடசடசட வென்றே சாரலும் மழையாகும்! மளமளமளமளமளமள வென்றே அருவியில் நீர்வீழும்! குமுகுமுகுமுகுமுகுமுகுமு வென்றே கடலில் அலைமோதும்! கலகலகலகலகலகல வென்றே கைவளை ஓசையிடும்! தளதளதளதளதளதள வென்றே மேனியும் தகதகக்கும்! பளபளபளபளபளபள வென்றே புன்னகை பூத்துவரும்! ஜிலுஜிலுஜிலுஜிலுஜிலுஜிலு நகையும் மெய்யில் மெருகூட்டும்! செவ்வரியோடும் கண்களில்புதிய நாணம் குடைவிரிக்கும்! கொவ்வைக்கனியிதழ் கொஞ்சுமொழியினைக் கொட்டித்

Read More...

அந்த அவள் …..

 அந்த அவள் ….  ************************************ செந்தா மரைமுகமோ! சிரித்திடும் தேன்மலரோ ! தந்தங்கள் அவயவமோ! தளிர்மேனி சந்தனமோ! கண்கள் கயல்மீனோ! கடல்நீலம் கொண்டதுவோ! அந்திவரும் சந்திரனோ! அந்தஅவள் தான்யாரோ? ஊர்வியக்கும் மோகினியோ! உயர்மாடப் பைங்கிளியோ! ஊர்ந்துவரும் தேரழகோ! உற்சவத்துத் தேவதையோ! கார்கூந்தல் கருமுகிலோ! காந்தள்மலர் கைவிரலோ! வார்த்திட்ட பொற்சிலையோ! வந்துநின்ற அவள்யாரோ? என்னுள்ளம் புகுந்தவளோ! இதயத்தைக் கவர்ந்தவளோ! எந்தனுயிர்க் காதலியாய் இன்பமெலாம் தந்தவளோ! சொந்தமெனச் சொன்னவளோ! சுகதுக்கம் பகிர்ந்தவளோ! சிந்தையிலே நிறைந்தவளோ! அந்தஅவள் தான்யாரோ? ஊண்தந்த உத்தமியோ!

Read More...

காதல் என்றால்….

 காதல் என்றால்..  ************************************ காதல் என்பது கண்ணில் தெரிவது   ஆதாம் ஏவாள் சொல்லித் தந்தது   அதரத் தேனில் அன்பைச் சொரிவது   இதயம்  புகுந்து  இன்பம் தருவது!    காதல் என்பது இயற்கை யானது    சாதியும் இனமும் மொழியும் கடந்தது   ஆதியோ டந்தமாய் அகத்தில்  இணைவது   சுதியொடு லயமாய் இசையென் றாவது!      காதல் என்பது யுத்தம் போன்றது   மோதல் வரினும் முத்தம் கொள்வது   சதையொடு நகமாய்ச் சார்ந்தே இருப்பது   கதைக்குள் கதையெனக் காவியம் படைப்பது!    காதல் என்பது

Read More...

வான் புகழும் வள்ளுவர்

 வான் புகழும் வள்ளுவர்  ************************************ வியாசனின் பாரத்தை வியந்துநான் படித்ததில்லை!ஆய்ந்தநல் இராமன்காதை கம்பனைப் பயின்றதில்லை!ஐம்பெருங் காப்பியங்கள் யாதொன்றும் அறிந்தேனில்லை !அம்புவி கடந்துவாழும் வள்ளுவன் குறள்கண்டேனே! அகரமே சிகரமாதி பகவனே உலகமென்றான்!அகநக நட்பைப்போற்றி அழுக்காறு இழுக்குஎன்றான்!அகழ்ந்திடும் நிலத்தைப்போல இகழ்வாரைப் பொறுக்கச்சொன்னான்!தகவிலார் தக்காரெல்லாம் எச்சத்தால் புரியுமென்றான்! நாவினைக் காக்கச்சொன்னான்!நன்றியோ டிருக்கசொன்னான்!சோர்விலாள் பெண்ணேயென்றான்!சுற்றத்தால் பழமையென்றான்!வாய்மையே வாழ்வுஎன்றான்! வாக்கினில் இனிமையென்றான்!தெய்வத்தால் முடியாதாயின் முயற்சியில் வெற்றியென்றான்!எண்ணோடு எழுத்தைச்சேர்ப்பான்!இரண்டுமே கண்களென்பான்! அன்பிற்குத் தாழ்ஏன்?என்பான்!அந்தணர் அறவோரென்பான்!உழுவாரை உயர்த்திவைப்பான்!ஒழுக்கமே விழுப்பமென்பான்!குழலிசை புறத்தேதள்ளி மழலைச்சொல் இனிதுஎன்பான்! அருட்செல்வம் பெரிதுஎன்பான்!அளவறிந்து வாழச்சொன்னான்!வறியார்க்கு

Read More...

நாடு காக்கும் நாயகர்கள்

நாடு காக்கும் நாயகர்கள் ***************************** ஆரணங்கு சீதையின் அழகிலே மதிகெட்டு அபகரித்த லங்கா திபன் இராவணன் என்பானை அம்பினால் வீழ்த்திய இராமபிரான் ஓர் நாயகன்! ஆராய்ச்சி மணிகேட்டு அக்கணமே தன்மகனைத் தேர்க்காலில் இட்டுக் கொன்று நேர்மையாய் நீதியை நிலைநாட்டிப் புகழ்பெற்ற மனுநீதி ஓர் நாயகன்! அருநெல்லிக் கனியினை ஒளவைக்கு அளித்திட்ட அதியமான் ஓர் நாயகன்! புறாவொன்றைக் காத்திடத் தன்னையே தந்திட்டச் சிபிமன்னன் ஓர் நாயகன்! தருமத்தின் தலைவனாய் செஞ்சோற்றுக் கடன்தீர்த்த கர்ணனும் ஓர் நாயகன்!  போர்வென்று பெருவுடையார்

Read More...

பூமியே …. பொறுமைத் தாயே

பச்சைமரங்கள் படருங்கொடிகள் இச்சைக்கிளிகள் இசைக்கும்குயில்கள் அச்சமில்லாச் சிங்கம்புலிகள் அஞ்சியோடிடும் முயல்கள்மான்கள் மிச்சமுள்ள ஊர்வனநடப்பன கொஞ்சிக்களித்துக் கூடியேவாழும் தச்சன்செய்யாப் பதுமைதானோ? தருமம்தழைக்கும் தாயெனும்பூமி!   ஆற்றங்கரையும் அடர்ந்தகாடும் நாற்றங்காலும் நஞ்சைபுஞ்சையும் காற்றும்புயலும் கனமழைப்பெருக்கும் தோற்றப்பிழையும் துயரும்வறுமையும் கோட்டைஅரண்மனை கொத்தளக்கூடம் வாட்டும்யுத்தம் வழியும்இரத்தம் வேட்கைச்சுதந்திரம் விளையும்சாதனைக் காட்சிகள்காட்டும் களமேபூமி!   கயல்வாழ்கடல்கள் கலக்கும்பூகம்பம் உயரியமலைகள் உதிர்ந்திடுமுயிர்கள் நயவஞ்சகர்கள் நல்லவர்வல்லவர் நாட்டைக்காத்திடும் இராணுவவீரர் இயல்பாய்வாழப் புகலிடம்தந்து இயற்கைச்சீற்றம் எதையும்தாங்கிச் சுயமாய்ச்சூரிய தேவனைச்சுற்றிச் சுழன்றேகாத்திடும் சுந்தரபூமி!   பரந்துவிளங்கும் பாலைநிலமாய்ச் சுரக்கும்சுனைநீர் பெருக்கும்சுரபியாய்

Read More...