Kaasu Maalai

Kaasu Maalai

காசு மாலை மின்மயானம் ஒரு கல்யாண மண்டபம் போல் இருந்தது.  மொஸைக் தரை, மற்றும் சுவர்களில் டைல்ஸ் பாதிக்கப்பட்டுப் படு சுத்தமாக இருந்தது.  பயத்திலும், விரக்தியிலும், மிரட்சியிலும் நம்மை விரட்டும் மரணத்தின் ஓலமோ, துக்கப்பட்டுப் பீறிட்டு வரும் அலறலோ இல்லாமல் அந்த மின்மயானம் அமைதியாக இருந்தது.  சீருடை அணிந்த சில ஊழியர்களின் மெளனம் சார்ந்த அசைவுகளும், சிறுசிறு பேச்சுக்களுமே அந்த இடத்தில் நிரம்பி இருந்தது. கனமான துக்கம் அந்த அமைதியில் தெரிந்தது!  வாழ்வின் கடைசி யாத்திரைக்கு வருபவர்களுக்கு

Read More...

Ammulu

அம்முலு ரகுவை அவசர அவசரமாகக் குளிப்பாட்டினாள் ரேணு. மணி எட்டு ஆகப் பத்து நிமிடங்களே இருந்தன. மூன்றரை வயது கூட ஆகாத ரகுவை, பஹ்ரைனில் உள்ள இந்தியன் ஸ்கூலில் சேர்க்கும் முன்பாக, ப்ரீ-நர்ஸரி பள்ளியில் சேர்த்து, நாலு குழந்தைகளுடன் பழகவிடப் பிளான் பண்ணியிருந்தார்கள் ரேணுவும், பாஸ்கரும். நல்ல வேளையாக அவர்கள் வீட்டிலிருந்து நடக்கும் தூரத்திலேயே இருந்தது மிஸஸ் செளத்ரியின் நர்ஸரி ஸ்கூல். மிகவும் :.ப்ரெண்ட்லியாகப் பேசி, முதல் நாளே ரகுவுக்குப் பிடிக்கும் விதத்தில் அவளும் நடந்து கொண்டு

Read More...

இளமை

சிலுசிலுசிலுசிலுசிலுசிலு வென்றே தென்றல் வீசிவரும்! குளுகுளுகுளுகுளுகுளுகுளு வென்றே நிலவும் ஒளிசிந்தும்! கலகலகலகலகலகல வென்றே கொடிகள் அசைந்தாடும்! கமகமகமகமகமகம வென்றே மலர்கள் மணம்வீசும்! கடகடகடகடகடகட வென்றே கார்முகில் உருண்டோடும்! சடசடசடசடசடசட வென்றே சாரலும் மழையாகும்! மளமளமளமளமளமள வென்றே அருவியில் நீர்வீழும்! குமுகுமுகுமுகுமுகுமுகுமு வென்றே கடலில் அலைமோதும்! கலகலகலகலகலகல வென்றே கைவளை ஓசையிடும்! தளதளதளதளதளதள வென்றே மேனியும் தகதகக்கும்! பளபளபளபளபளபள வென்றே புன்னகை பூத்துவரும்! ஜிலுஜிலுஜிலுஜிலுஜிலுஜிலு நகையும் மெய்யில் மெருகூட்டும்! செவ்வரியோடும் கண்களில்புதிய நாணம் குடைவிரிக்கும்! கொவ்வைக்கனியிதழ் கொஞ்சுமொழியினைக் கொட்டித்

Read More...

பொருள் பொதிந்த புறநானூறு

               பொருள் பொதிந்த புறநானூறு தமிழனென்று சொல்லி இத்தரணியில் தலை நிமிர்ந்து நின்று, கடந்து வந்த பாதையைக் கண்ணுறுங்கால், கன்னல் தமிழ்க் கடலுள் மூழ்கி முத்தென்றும், மணியென்றும், மின்னுகின்ற வைரமென்றும் நமது முன்னோர்கள் படைத்திட்ட இலக்கியத்தை, இயல்கொண்ட தமிழ் நயத்தை, இன்பத்தமிழ்க் காவியத்தைப், பசுமரத்தணியாக என்னுள் இழைத்துச் செதுக்கி வைத்த எந்தையும் தாயும் நிழலுருவாக நினைவென்ற பனிப்படலத்தில் தெரிகின்றனர்.  ஆங்கே திங்களோடும், செம்பரிதிச் சுடரோடும், விண்ணோடும், முகிலோடும் மண்ணோடும், மயக்குகின்ற இயற்கையோடும், என்றும் இளமையாய் வளர்கின்ற தமிழை

Read More...

அந்த அவள் …..

 அந்த அவள் ….  ************************************ செந்தா மரைமுகமோ! சிரித்திடும் தேன்மலரோ ! தந்தங்கள் அவயவமோ! தளிர்மேனி சந்தனமோ! கண்கள் கயல்மீனோ! கடல்நீலம் கொண்டதுவோ! அந்திவரும் சந்திரனோ! அந்தஅவள் தான்யாரோ? ஊர்வியக்கும் மோகினியோ! உயர்மாடப் பைங்கிளியோ! ஊர்ந்துவரும் தேரழகோ! உற்சவத்துத் தேவதையோ! கார்கூந்தல் கருமுகிலோ! காந்தள்மலர் கைவிரலோ! வார்த்திட்ட பொற்சிலையோ! வந்துநின்ற அவள்யாரோ? என்னுள்ளம் புகுந்தவளோ! இதயத்தைக் கவர்ந்தவளோ! எந்தனுயிர்க் காதலியாய் இன்பமெலாம் தந்தவளோ! சொந்தமெனச் சொன்னவளோ! சுகதுக்கம் பகிர்ந்தவளோ! சிந்தையிலே நிறைந்தவளோ! அந்தஅவள் தான்யாரோ? ஊண்தந்த உத்தமியோ!

Read More...

காதல் என்றால்….

 காதல் என்றால்..  ************************************ காதல் என்பது கண்ணில் தெரிவது   ஆதாம் ஏவாள் சொல்லித் தந்தது   அதரத் தேனில் அன்பைச் சொரிவது   இதயம்  புகுந்து  இன்பம் தருவது!    காதல் என்பது இயற்கை யானது    சாதியும் இனமும் மொழியும் கடந்தது   ஆதியோ டந்தமாய் அகத்தில்  இணைவது   சுதியொடு லயமாய் இசையென் றாவது!      காதல் என்பது யுத்தம் போன்றது   மோதல் வரினும் முத்தம் கொள்வது   சதையொடு நகமாய்ச் சார்ந்தே இருப்பது   கதைக்குள் கதையெனக் காவியம் படைப்பது!    காதல் என்பது

Read More...

வெற்றி நிச்சயம்

வெற்றி நிச்சயம் சாரதா கலைக் கல்லூரி களை கட்டி இருந்தது. பேராசிரியர் நல்லகண்ணுவின் முப்பத்தியேழு ஆண்டு சேவை நிறைவடைந்து பிரிவுபசார விழா! அத்தோடு, அரசாங்கம் ‘நல்லாசிரியர்’ விருது அளித்து அவரைப் பாராட்டி, கலெக்டர் வெற்றிச்செல்வன் தலைமை ஏற்று உரை நிகழ்த்துவதற்கும் ஏற்பாடு ஆகியிருந்தது. தொலைக்காட்சியில் பேராசிரியரின் பேட்டி தொடங்கியது. ‘சார்! தங்களின் அனுபவம்….விடைபெறும் இத்தருணத்தில், எப்படி உணர்கிறீர்கள்’? ‘முதலில், இந்த எளியவனின் சிறிய சேவைக்கு இடமளித்த சாரதா கலைக்கல்லூரிக்கு எனது நன்றி! இக்கல்லூரியில் படித்தவர்கள் அனேகம் பேர்,

Read More...

வான் புகழும் வள்ளுவர்

 வான் புகழும் வள்ளுவர்  ************************************ வியாசனின் பாரத்தை வியந்துநான் படித்ததில்லை!ஆய்ந்தநல் இராமன்காதை கம்பனைப் பயின்றதில்லை!ஐம்பெருங் காப்பியங்கள் யாதொன்றும் அறிந்தேனில்லை !அம்புவி கடந்துவாழும் வள்ளுவன் குறள்கண்டேனே! அகரமே சிகரமாதி பகவனே உலகமென்றான்!அகநக நட்பைப்போற்றி அழுக்காறு இழுக்குஎன்றான்!அகழ்ந்திடும் நிலத்தைப்போல இகழ்வாரைப் பொறுக்கச்சொன்னான்!தகவிலார் தக்காரெல்லாம் எச்சத்தால் புரியுமென்றான்! நாவினைக் காக்கச்சொன்னான்!நன்றியோ டிருக்கசொன்னான்!சோர்விலாள் பெண்ணேயென்றான்!சுற்றத்தால் பழமையென்றான்!வாய்மையே வாழ்வுஎன்றான்! வாக்கினில் இனிமையென்றான்!தெய்வத்தால் முடியாதாயின் முயற்சியில் வெற்றியென்றான்!எண்ணோடு எழுத்தைச்சேர்ப்பான்!இரண்டுமே கண்களென்பான்! அன்பிற்குத் தாழ்ஏன்?என்பான்!அந்தணர் அறவோரென்பான்!உழுவாரை உயர்த்திவைப்பான்!ஒழுக்கமே விழுப்பமென்பான்!குழலிசை புறத்தேதள்ளி மழலைச்சொல் இனிதுஎன்பான்! அருட்செல்வம் பெரிதுஎன்பான்!அளவறிந்து வாழச்சொன்னான்!வறியார்க்கு

Read More...

வானதி

வானதி “வாடாமலர்” பத்திரிகையை மேற்கொண்டு நடத்த முடியவில்லை; முன்போல் என்னால் இயங்க முடியாததும் ஒரு காரணம்… உன்னால் இங்கு உடனே வர முடிந்தால், ஏதேனும் முயற்சி செய்து பார்க்கலாம். இல்லாவிடில், விற்றுவிடலாம் என்று நினைக்கிறேன்.” – அப்பாவின் கடிதம், கனகாவை உறைய வைத்திருந்தது. அப்பாவிற்கு, அம்மா ஒரு கண் என்றால், அவர் மிகுந்த ஈடுபாட்டுடன் நடத்தி வந்த வாடாமலர் மாத இதழ் மற்றொரு கண்ணாக இருந்தது. நாற்பது ஆண்டுகளைக் கடந்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருந்த வாடாமலர்,

Read More...

நாடு காக்கும் நாயகர்கள்

நாடு காக்கும் நாயகர்கள் ***************************** ஆரணங்கு சீதையின் அழகிலே மதிகெட்டு அபகரித்த லங்கா திபன் இராவணன் என்பானை அம்பினால் வீழ்த்திய இராமபிரான் ஓர் நாயகன்! ஆராய்ச்சி மணிகேட்டு அக்கணமே தன்மகனைத் தேர்க்காலில் இட்டுக் கொன்று நேர்மையாய் நீதியை நிலைநாட்டிப் புகழ்பெற்ற மனுநீதி ஓர் நாயகன்! அருநெல்லிக் கனியினை ஒளவைக்கு அளித்திட்ட அதியமான் ஓர் நாயகன்! புறாவொன்றைக் காத்திடத் தன்னையே தந்திட்டச் சிபிமன்னன் ஓர் நாயகன்! தருமத்தின் தலைவனாய் செஞ்சோற்றுக் கடன்தீர்த்த கர்ணனும் ஓர் நாயகன்!  போர்வென்று பெருவுடையார்

Read More...